search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவை சிகிச்சை"

    • உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).

    இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

    அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.

    பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் நடந்தது

    திருவனந்தபுரம் :

    திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை செய்து வருகிறது. இங்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு 10-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிம்ஸ்ஹெல்த்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சஹதுல்லா விழா வை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சுகாதார துறையின் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாக உடலுறுப்பு தானம் கருதப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஒவ்வொரு தனிநபரும் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் வழியாக ஒவ்வொரு உறுப்புதான செயல்பாடும் நிகழ்கிறது. உறுப்புதானம் செய்வதற்கு தங்களது விருப்பத்தை தாராள மனதுடன் வெளிப்படுத்த அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் முன்வர வேண்டும்.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் மிக உயர்ந்த அளவிலான வெற்றி விகி தத்தை கிம்ஸ்ஹெல்த் மருத் துவமனை கொண்டிருக்கி றது. கிம்ஸ்ஹெல்த், முதன் முதலில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையினை 2013 ஜுலை 23-ந்தேதி அன்று வெற்றிகரமாக மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து, இதுவரை 120-க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செயல்முறைகளை இது வெற்றிகரமாக செய்தி ருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டை யும் ஒருங்கிணைந்த செயல் பாட்டை மேற்கொண்டது.

    பிரிக்கப்பட்ட கல்லீரலின் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை, டயாலிசிஸ் உடன் சேர்த்து கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் மிகக்குறைவான உடல் எடை கொண்ட குழந்தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய சாதனை நிகழ்வுகளை கேரளா மாநிலத்தில் வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் மருத்துவமனை என்ற பெருமையை கிம்ஸ்ஹெல்த் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவானது உறுப்புதானம் அளித்த வர்கள் மற்றும் உறுப்புதானம் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருங்கிணைந்த மனதை நெகிழச்செய்யும் விதமாக அமைந்தது. உறுப்புதானம் பெற்ற 160 பேர் ஆர்வத் தோடு கலந்துகொண்டனர்.

    6 பேருக்கு தனது உடலு றுப்புகளை தானமாக வழங்கிய 16 வயதான சாரங் மற்றும் இரு கண்களையும், சிறுநீரகங்களையும் தானமாக வழங்கிய சரத் கிருஷ்ணன் ஆகியோரது குடும்பங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. அவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்ட னர்.

    கிம்ஸ் ஹெல்த்தில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மேறெ் கொள்ளப்பட்ட 10 வயதான ஆன் மேரி என்ற சிறுமி, அவளது கைவினை திறன் களை வெளிப்படுத்தும் தயாரிப்புகளின் கண்காட்சி யை நடத்தினாள். மேலும் டாக்டர் சஹதுல்லாவுக்கு இதய வடிவில் தாளினால் உருவாக்கப்பட்ட அழகான மாலையை அச்சிறுமி வழங்கினாள்.

    நிகழ்ச்சியில் கிம்ஸ் ஹெல்த்தின் துணைத்தலை வர் டாக்டர் விஜயராகவன், கேரளா கல்லீரல் பவுண்டே ஷனின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லீரல், கணையம் மற்றும் ஈரல் பித்தக்கால்வாய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலை மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சபீர்அலி வரவேற்று பேசினார்.

    மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பா ளரும், உறுப்புமாற்று சிகிச்சையின் ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் பிரவீன் முரளிதரன், நன்றி கூறினார்.

    இதில் இரையக்குடலியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் மது சசிதரன் மற்றும் டாக்டர் அஜித் கே. நாயர், கல்லீரல், கணையம் மற்றும் பித்தக் கால்வாய் துறையின் நிபு ணர்கள் டாக்டர்கள் வர்கீஸ் ஹெல்டோ மற்றும் ஸ்ரீஜித், மயக்க மருந்தியல் துறையின் நிபுணர் டாக்டர் ஹஷிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
    • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

    இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

    • முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

    கடலூர்:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
    • வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.

    தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.

    இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:-

    வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
    • வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது

    கன்னியாகுமரி :

    நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது 55). இவர் மூட்டுவலி மற்றும் மூட்டு தேய்மானத்தால் கடந்த 3 வருடங்களாக சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் குளச்சல் உடையார்விளை மிதுனா எலும்புமுறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் ஶ்ரீராம் தலைமையிலான மருத்துவ குழுவினர், நவீன முறையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

    செயற்கை மூட்டுகள் பொருத்தப்பட்ட 3-வது நாளே ஜெயக்குமாரி, வேறு எந்த உதவிகளும் இன்றி நடந்தார். 5-வது நாள் வீட்டிற்கு நடந்து சென்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். பல்வேறு ஊர்களில் சிகிச்சை எடுத்தும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இத்தகைய மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு மிகக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைத்ததில் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர் ஶ்ரீராம் கூறுகையில், மூட்டு தேய்மானம் ஆர்த்ரை டிஸ் என்பது மூட்டுகளின் வீக்கம். எலும்புகளின் முனைகளில் உள்ள திசுக்கள் படிப்படியாக சேதம் அடைவதால், மேற்பரப்பில் வெளிப்படும் எலும்புகள், மற்றொரு எலும்போடு இணையும் இடங்களில் உராய்வு ஏற்பட்டு, வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கும் முழங்காலின் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் மீட்டு எடுப்பதற்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் சிறந்த தீர்வாகும். மூட்டு மாற்றுதல் என்பது வலியிலிருந்து நிவாரணம், மேம்பட்ட இயக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்குகிறது. மேலும் மூட்டு மாற்று சிகிச்சையின் பலன் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 நாட்களிலேயே நடைபயிற்சி மற்றும் பிசியோ தெரபி மூலம் வலியின்றி இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் செல்ல முடிகிறது என்றார்.

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதில் மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு நேற்று மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மற்றும் முதல்வர் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது நன்றாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைக்காக இன்னும் சில நாட்களில் அழைப்போம்" என்றார்.

    • வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத்.

    1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை.

    அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. என்றாலும் சஞ்சுபகத் தனது வீங்கிய வயிற்றை பற்றி கவலைப்படாமல் வேலையை தொடர்ந்து வந்தார்.

    அவரது நண்பர்களும், அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை கர்ப்பிணி என கேலி-கிண்டல் செய்து வந்தனர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

    ஒரு கட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அஜய்மேத்தா, சஞ்சுபகத் கட்டியால் அவதிப்பட்டதாக கருதினார். அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது 'மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி' என்று கருதினர். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்து விட்டதாக நினைத்தனர்.

    ஆனால் பின்னர் நடந்த பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது.

    பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
    • சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடந்த மொத்த பிரசவங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்தது.

    இது ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேசன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் 50.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 39.3 சதவீதமாகவும் உள்ளனர்.

    குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    ஒரு சில மருத்துவமனைகள், தாய்க்கு இயல்பான பிரசவம் செய்யும் திறன் இருந்தபோதிலும், ஆபரேசனை தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றன. இதனால் சாதாரண பிரசவத்துடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.

    மேலும் சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தாங்களாகவே ஆபரேசனை கோருகின்றனர். இது சாதாரண பிறப்பை விட பாதுகாப்பான விருப்பம் என்று நம்புகிறார்கள்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    சமீப நாட்களில், மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான கர்ப்பம் மற்றும் செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவது இயல்பானதாக மாறி வருகிறது.

    இது பிரசவிக்கும் போது சிக்கலின் விகிதத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்ற, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆபரேசன் தேர்வு செய்யப்படுகிறது.

    15 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பங்கள் சிக்கல்களில் இறங்குகின்றன, அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. இங்கே தாய் மற்றும் குழந்தைக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக மாறுகிறது.

    மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளார்ந்த அபாயத்தைக் கொண்டுள்ளன.

    புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்ப்பாலூட்டுவதில் இருந்து தூரமாக்கும் என்ற கவலையும் உள்ளது.

    அறுவை சிகிச்சையின் காரணமாக, மென்மையான கீறல்கள் மற்றும் தையல்களால், தாய்மார்கள் உட்கார்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இருப்பினும் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பது, சிக்கல்களைத் தடுப்பது மற்றும் சாதாரண பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின் போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும் செய்ய பரிந்துரைக்கிறோம் என்றனர்.

    • இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
    • சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் விளையாடி விளையாடினார்.

    இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    ×